Sri Vu Ve Perukaranai Swami

Dharmam Thalai Kaakkum
Sri Vu Ve Perukaranai Swami
Sri Vu Ve Perukaranai Swami attains Aacharyan Thiruvadi
Age does not stand in his way :
87th Thirunakshathram
Swami's 86th Thirunakshathram
Swami's 85th Thirunakshathram
Welcome to know about Sri Perukaranai Swami
Swami's profile in brief
Awards
Perukaranai's Swami's Sathabhishekam
Books authored by Perukaranai Swami
Stotra Ratnam
Upanyasa Manjari
Ahobila Kshethram
Pushpanjali
Ekadasi Mahimai
Dharmam Thalai Kaakkum
Mouna Vridham
Ilaya Perumaalum Ilaya Azhvaanum
Hanumanaip Ponra Aacharyan
Thula Kaveri Maahaathmyam
Mummatha Saaram
Nadappadhu Nadandhe Theerum
Patraa Kurai
Pandidhan Yaar ?
Twentyfour Steps
Saadhu Dharisanam
Josyam Balithuvittadhe
Vedham Odhudhal
Pirattiyin Avadhaara Visesham
Anger turns to Anugraham !
Paravaigal
Ten, Three and One
Kadan - Loan
Be Proud, but how ?
Sathurangam
Maarvam Enbadhu Oru Koil
Paasam
Ramanuja Padam
Viswamithrar
Idukkan Kalaiyum Iraivan
Ramanujar Kaattiya Visishtadvaidham
Sri Bashyamum Sri Bashyakaararum
Bagavath Baktharhalin Perumai
Kannika Dhaanam
Kakkum Iyalbinan
What is Truth?
Sampathum Vibathum
Saayujjam
Moonru Manidhargal
Amudhamum Vizhamum
Oru Thaniganin Kelvi
Yathra Praadhaa Sahodharaha
Vuyiraa? Maanamaa?
Moonru Kutrangal
Sammarjanam
Manam En Mariyadhu ?
Sraardham Seyvadhu En ?
Pithru Kaariyathil Oru Visesham
Makkalin Pokku
Dharma Sookshmam
Pava Naasini
Thirumagal Vasikkum Idam
Pirandha Idathaye Adaiyum
Aacharya Kaalamegam
Bagavath Geethaiyum Thiruppavaiyum
Kodari
Ore Iravu Ore Pahal
Padithavan Panakkaaranaa ?
Iru Sahodharargal
Bakthanin Perumai
Vunmaiyai Yosithu Paar
Manidhanin Vayadhu
Naangal Naangale Neengal Neengale
Prapathiyil Oru Visesham
Dhaasyam
Vaishnavan Yaar ?
Deha Sampathu
Favorite Links
Contact Me

...The word dharma is derived from the root, ‘dhr’, meaning ‘wear’. Dharma is that which is worn. Dharmaraja said: “Whoever protects dharma will in turn be protected by dharma”.

தர்மம் தலைகாக்கும்

தர்மம் அதர்மம் என்று இரண்டு உண்டு. தர்மம் செய்பவனை தர்மிஷ்டன் என்றும், அதர்மம் செய்பவனைப் பாவி என்றும் சொல்லுவார்கள். இதில் அதிகமாக தர்மத்தை செய்பவனை தர்மீஷ்டன் என்றும் அதிக பாபங்களை செய்பவனை பாபிஷ்டன் என்றும் சொல்ல வேண்டும் வ்யாகரண நூல்படி. கரிஷ்டன் மஹிஷ்டன் வசிஷ்டன் என்பதை கவனிக்கவும். சாஸ்திரங்களில் 'இதைச் செய்' என்று சொல்லப்பட்டு, நமக்கு இன்பங்களைக் கொடுப்பது தர்மம். 'இதைச் செய்ய வேண்டாம்; இதனால் தீங்குகள் விளையும்' என்று சொல்லப்படுவது அதர்மம்; தர்மத்தைச் செய்பவன் நியாயமான மார்க்கத்தில் செல்பவன். நியாய மார்க்கத்திலிருந்து நல்ல காரியங்களைச் செய்யும் தர்மிஷ்டன் என்றைக்கும் கஷ்டத்தை அடையமாட்டான். அவன் செய்யும் தர்மமே அவனைக் காக்கும். ஆகையால்தான் அக்ரமமான காரியங்களைச் செய்ய மகான்கள் இசையமாட்டார்கள்.

ஸ்ரீராமன் தான் அரசிழந்து காட்டிற்குச் சென்ற சமயத்தில் லக்ஷ்மணனைப் பார்த்துக் கூறுகிறான்: 'ந ஹீச்சேயம் அதர்மேண சக்ரத்வமபி துர்லபம்', 'அதர்மபயபீதஸ்ச நாத்மாநமபிஷேசயே' என்று. "லக்ஷ்மணா, நான் அதர்மத்திற்குப் பயப்படுகிறவன்; தப்புக் காரியங்களைச் செய்ய விரும்பாதவன். அயோத்தியில் முடிசூட்டிக் கொள்வது எனக்கு மிகவும் சூலபமானதே. ஆயினும் அதர்ம மார்க்கத்தில் அரசைப் பெற விருப்பமில்லை. அயோத்தி என்ன? தேவலோகத்திலிருந்து இந்திரபதவியை அடைந்து அரசு பெறவும் எனக்குச் சக்தி உண்டு. என் கோதண்டமும் பாணமும் எங்கே சென்றன? அநீதி மார்க்கத்தில் இருந்து பணம் சம்பாதிக்கக்கூடாது என்பதனால்தான் சும்மா இருக்கிறேன். தர்மத்தைக் கடைபிடித்து நாம் ரக்ஷித்தால் அது நம்மைக் காக்கும் என்றான்.

உலகத்திலும் அதர்மத்தை விரும்பாமலிருப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. பரலோகத்தில் சென்று இன்பங்கள் நமக்கு இல்லாமற் போய்விடுமோ என்று பயந்து இவ்வுலகத்தில் அதர்மத்தைச் செய்ய மாட்டார்கள். அக்கிரமங்களைச் செய்தால் யமன் நம்மை அழைத்துச் சென்று தனது உலகத்தில் பல யாதனைகளுக்கு ஆளாக்குவான் என்ற பயத்தினால் தப்புக் காரியங்களைச் செய்ய மாட்டார்கள். நாம் தப்புச் செய்யும் போது உலகத்தவர் பார்த்துவிட்டால், 'ஐயோ! இவன் மகாபாவி; சாஸ்திரத்துக்கு முரணாக வேலைகளைச் செய்பவன்; எதற்கும் அஞ்சாதவன். இவனுடன் சேர்ந்தாலே நமக்கும் பாவம் உண்டாகும்' என்று பரிகசித்து நிந்திப்பார்கள் என்ற காரணத்தாலும் பாவங்களில் ஈடுபடமாட்டார்கள். இவ்வாறு இவனைப் பார்த்து அவனும் அவனைப்பார்த்து இவனும் என்ன சொல்வார்களோ என்று பயப்படுவார்கள்.

பரலோகபயாத் கேசித், யமதண்டபயாத் பரே |
பரஸ்பரபயாத் கேசித் பாபம் நேச்சந்தி மாநவா: ||

இந்த மூன்று காரணங்களைக் கொண்டு உலகத்து ஜனங்கள் அக்ரமமான வேலைகளைச் செய்யாதிருக்கின்றனர். இந்த மூன்று விதப் பயமுமற்று இஷ்டப்படி திரிந்து ஆடுமாடுகளைப் போல் நடக்கிறவர்களைப்பற்றி நாம் மனத்தினாலும் நினைக்கவேண்டாம்.

அதர்மத்துக்குப் பயந்து தர்மமார்க்கத்தில் செல்லுகிறவன் என்றைக்குமே கஷ்டப்படமாட்டான். அவனுக்கு தெய்வம் சகாயம் செய்யும். அளவற்ற சுகத்தைப் பெறுவான். இதைத் தான் நாம் இங்குக் கூற வந்தோம். தர்மமோ சக்ஷதி ரக்ஷித: என்பது நியாயம்.

ஓர் ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நிறையப் பணமுள்ளவன். பணத்தைப் பிறருக்குக் கொடுத்து லேவாதேவி செய்பவன். பண ஆசை பிடித்தவன். இவன் கடன் கொடுக்கும் பொழுதே எழுநூறு ரூபாய் கொடுத்து ஆயிரம் ரூபாய்க்குப் பாண்டு எழுதி வாங்கிக் கொள்வான். 'நாமும் சுகப்பட வேண்டும்; ஜனங்களும் நம்மைப் போல் சுகமடைய வேண்டும்' என்ற எண்ணம் இவனுக்கு லவலேசமும் கிடையாது. தன் லாபத்திலேயே நோக்கமுள்ளவன். 

பெரும்பாலும் எல்லா வியாபாரிகளுக்குமே இந்த எண்ணம் உண்டு. பஸ் ஓட்டுகிறவன் ஜனங்களுடைய செளகரியத்தை நோக்குகிறானா? ஆஸ்பத்திரி ஏற்பாடு செய்து வைத்தியம் செய்கிறவன் ஜனங்களுடைய க்ஷேமத்தையா எதிர்பார்க்கிறான்? இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வைத்தியம் செய்து கொண்டால் தனக்கு லாபம் வரும் என்றுதானே எதிர்பார்க்கிறான். கடை வைத்துள்ளவன் எல்லோருமே கடையை திறந்தவுடன் கல்பூரத்தால் ஆர்த்தி செய்து நிவேதனமும் செய்து கடவுளை வணங்குகிறான். ஏன். வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்று. இவ்வாறே மருந்து ஷாப் வைப்பவனும் நடத்துகிறான், வியாபாரம் அதிகம் நடப்பதற்கு. இதனால் தெரிந்துகொள்கிறோம். எல்லோருக்கும் வியாதி வரவேண்டும் என்றுதானே அபேக்ஷிக்கிறான். ஜவுளிக்கடை, மளிகைக்கடை வைப்பவர்கள் தங்கள் நலத்தைத்தான் கவனிக்கிறார்களேயன்றி ஜனங்களுடைய க்ஷேமத்தை எதிர்பார்ப்பதில்லை. அதிகாரிகளும், 'ஜனங்களுக்குச் சேவை புரியவே நாம் ஏற்பட்டிருக்கிறோம்' என்பதை மறந்து, தங்களது லாபத்திலேயே நோக்கமுடையவர்களாக இருக்கின்றனர் என்பது சகஜமாகிவிட்டது. ஆயினும் இந்த லேவாதேவி செய்யும் வியாபாரி மிக்க பேராசை பிடித்தவன். நாலு ஐந்து வட்டிக்குக் குறையாமல் கடன் கொடுக்க மாட்டான். இவன் கெடு வைத்தபடி பணத்தை வசூல் செய்துவிடுவான்.

இவன் ஒரு சமயம் பலருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டான். வெகு நாள் சென்றன. இந்தப் பணத்தை வசூல் செய்வதற்குக் குதிரைவண்டியில் ஏறிக்கொண்டு ஆங்காங்கே சென்றான். பணமும் வசூலாகிவிட்டது. ஒவ்வோர் இடத்திலும் அவரவர் கொடுத்த அசல் வட்டி எல்லாவற்றையும் தனித்தனியே பையில் போட்டுக் கட்டி எடுத்துக் கொண்டு வண்டியிலேறிக் கொண்டு ஊருக்குத் திரும்பினான். வரும்போது வழியில் ஒரு பணப்பை கீழே தவறி விழுந்துவிட்டது. வீட்டிற்கு வந்ததும் ஒவ்வொரு பையையும் கணக்கிட்டுப் பீரோவில் வைத்தான். அப்பொழுதுதான் தன்னிடமிருந்து ஒரு பை காணாமற்போனதை அறிந்தான்.

அப்பொழுது இரவு மணி பத்து. இனி என்ன செய்வான்? காலை விடிந்ததும் கவனித்துக்கொண்டே வண்டி வந்த வழீயாகப் பார்த்தான். கிடைக்கவில்லை. பணத்தில் அதிக ஆசை வைத்திருந்த இவனுக்குப் பணப்பை தொலைந்து போன படியால் தூக்கமும் இல்லை; நிம்மதியும் இல்லை. கவலை அதிகமாகிவிட்டது. எவ்வளவோ அதிகமான லாபத்தை இவன் அடைந்திருந்தபோதிலும் நஷ்டமான பணத்தைப்பற்றியே வருத்தம் அதிகமாக இருந்தது. இதை எப்படியாவது பெற வேண்டும் என்று எண்ணி ஒரு சூழ்ச்சி செய்தான். "என் பணப்பை வண்டியில் வரும்போது கீழே நழுவி விழுந்துவிட்டது. அந்தப் பையைப் பணத்துடன் யார் கொண்டுவந்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு நூறு ரூபாய் இனாம் தருகிறேன்" என்று ஊரில் ஒவ்வொரு வீதியிலும் தண்டோரா அடித்தான்.

அந்த ஊரில் ஓர் அந்தணர் இருந்தார். அவர் நன்கு வேதமோதியவர்; தர்மநெறியை மீறாதவர்; நல்லொழுக்கமுடையவர்; தெய்வபக்தியுள்ளவர். அவர் பரம ஏழையாயினும் பிறர் பொருளை விரும்பாதவர். வழியில் ஏதாவது பணம் கிடைத்தாலும் அதைக் காஷ்டலோஷ்டத்துக்குச் சமமாக நினைப்பவர். அவர் அன்றிரவு வரும்போது இந்தப் பணப்பையைக் கண்டார். வழியில் இதைக் கண்டதும் சொந்தக்காரனிடம் கொடுத்துவிட எண்ணி வீட்டுக்கு எடுத்து வந்தார். மனைவி மக்கள் எல்லாரும் இதைப் பார்த்து, "இதை யாரிடமும் சொல்ல வேண்டாம். நாமே எடுத்துக் கொள்ளலாம்" என்று பலவந்தம் செய்தார்கள். ஆயினும், 'இது பிறர் பொருள் ஆகையால் இதில் ஆசைவைக்கக்கூடாது' என்று எண்ணி, அவர் இதைச் சொந்தக்காரனிடம் கொடுத்துவிட வேண்டும் என்று ஒரே மனதாக இருந்தார். மறு நாள் வியாபாரி ஒவ்வொரு வீதியிலும் தண்டோராப் போட்டதைக் கேட்டதும், அவனிடத்தில் இந்தப் பையைக் கொடுத்து நூறு ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்று மனத்துள் மகிழ்ந்தார். உடனே கையை எடுத்துக் கொண்டு முன்சொன்ன வியாபாரியிடம் சென்றார். பணப்பையைக் கொடுத்தார்.

"நான் வெளியூரிலிருந்து வீட்டுக்கு வரும்போது வழியில் இந்தப் பை கிடைத்தது. இதைச் சொந்தக்காரரிடம் கொடுக்க வேண்டுமென்று எண்ணினேன். நீங்களும் தண்டோரா முறையில் பறைசாற்றினீர்கள். இதை உங்களிடம் கொடுத்தேன்" என்று சொன்னார்.

வியாபாரி நஷ்டதிரவிய லாபம் என்று மகிழ்ச்சியடைந்தான். பையை வாங்கி ரூபாயை எண்ணினான். அதில் அவன் வைத்திருந்த தொள்ளாயிரம் ரூபாய் இருந்தது. பிறகு, "அந்தணரே, நீர் போய்வாரும்" என்றான். இவர், "நூறு ரூபாய் கொடுப்பதாகப் பறைசாற்றினீர்களே; அதைக் கொடுங்கள்" என்றார். சூழ்ச்சி மூலமாகப் பணத்தைப் பெறத் தண்டோரா அடித்த வியாபாரி நூறு ரூபாயைக் கொடுக்க இசைவானா?

"அந்தணரே! இந்தப் பையில் ஆயிரம் ரூபாய் வைத்திருந்தேன். நீர் நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி தொள்ளாயிரம் ரூபாய்தானே வைத்திருக்கிறீர்? நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு மறுபடியும் ஏன் நூறு ரூபாயைக் கேட்கிறீர்? இவ்வளவு பேராசையா? அந்தணர் குலத்தில் பிறந்தும் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறீரே!" என்று திட்டி, அவரை வேலைக்காரன் மூலமாக அடித்து வெளியில் தள்ளித் தாழிட்டுவிட்டான். 

'தர்மநெறியில் தவறுதலின்றி நடந்த நமக்குமா இந்த கதி!' என்று எண்ணி வருத்தமுற்ற அந்தணர் தமது இல்லத்துக்கு வந்தார். அன்று இரவெல்லாம் ஒரே வேதனை: 'பணப்பையைப் பிரிக்காமல் அப்படியே கொடுத்திருந்தும் நூறு ரூபாயை நாம் எடுத்துக்கொண்டதாகப் பழியை நம்மேல் சுமத்தினானே!' என்ற கவலை இவருக்கு அதிகரித்தது. 'வியாபாரி இப்படி மோசம் செய்துவிட்டானே; இவனது கர்வத்தை அடக்கவேண்டும்' என்ற எண்ணமும் உண்டாயிற்று.

காலையில் எழுந்ததும் அந்தணர் ஊரிலுள்ள நியாயஸ்தலத்துக்குச் சென்றார். நடந்ததை அப்படியே கூறித் தமது மனக்கவலையை எடுத்துரைத்து நியாயம் வழங்க வேண்டுமென்று முறையிட்டார். நியாயாதிபதி, "நாளை வாரும்" என்று சொல்லி ஆலோசனையில் ஆழ்ந்தார். மறுநாள் காலை; நியாய ஸ்தலம். அந்தணரும் வியாபாரியும் வந்திருக்கின்றனர். பொது மக்கள் சூழ்ந்துகொண்டு இவ்விஷயத்தில் என்ன தீர்ப்பு நடக்கப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நீதிபதி அந்தணரைக் கூப்பிட்டு, "உமது குறை என்ன?" என்று கேட்டார். அந்தணர் எழுந்திருந்து, "நியாயம் வழங்குபவரே! நான் வரும்போது வழியில் பணப்பை கிடைத்தது வாஸ்தவம். அதை உடையவனிடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து எடுத்தேன். அதை நான் பிரித்தும் பார்க்கவில்லை. இந்த வியாபாரி பறைசாற்றியதைக் கேட்டு இவரே இதற்கு உடையவர் என்று எண்ணி இவரிடம் கொடுத்து, இவர் சொற்படி நூறு ரூபாயைக் கேட்டேன். இவர் கொடுக்கச் சம்மதிக்காமல் அபாண்டமான பழியை என்மேல் சுமத்தி அடித்து விரட்டிவிட்டார். நான் பணத்தில் ஆசையுள்ளவனாக இருந்தால் பணப்பையையே ஏன் இவரிடம் காட்ட வேண்டும்? அப்படியே அதில் இருந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டிருக்கலாமே" என்றார்,

உடனே நீதிபதி வியாபாரியைக் கேட்டார். வியாபாரி எழுந்தான். "ஐயா, நான் இந்த ஊரில் ஒரு பெரிய வியாபாரி; எல்லாருடைய மதிப்புக்கும் உரியவன்; பெரிய பணக்காரன். அனைவரும் என்னை நன்கு அறிந்திருக்கின்றனர். பணத்தாசையால் அற்பமான செயலைச் செய்யமாட்டேன். என் பணப்பை தொலைந்தது வாஸ்தவம். 'அதைக் கொண்டு கொடுப்பவருக்கு நூறு ரூபாய் இனாம் தருகிறேன்' என்று சொன்னதும் வாஸ்தவம். என் கையில் ஆயிரம் ரூபாய் இருந்தது. இவர் கொடுத்த பையைப் பிரித்து இவரெதிரில்தான் எண்ணினேன். தொள்ளாயிரம்தான் இருந்தது. ஆகவே இவர் நூறு ரூபாய் எடுத்துக் கொண்டு பையைக் கொடுத்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படியிருக்க மறுபடியும் எப்படி நூறு ரூபாயைக் கொடுக்க முடியும்? யோசித்து நீங்களே கூறுங்கள்" என்றான்,

நீதிபதி தீர்க்க ஆலோசனை செய்தார். பணத்தில் பேராசையை அடைந்த வியாபாரியின் தந்திரம் இது என்று உணர்ந்தார். அந்தப் பணப்பையை வாங்கித் தாமே எண்ணினார். தொள்ளாயிரமதான் இருந்தது. 

"வியாபாரியே, நீரும் பொய் சொல்லமாட்டீர். அந்தணர் பணப்பையை மறைக்காமல் உம்மிடம் கொண்டுவந்து கொடுத்தபடியால் அவரும் பொய் சொல்லமாட்டார். உண்மையில் அவர் பணத்தில் ஆசையுள்ளவராக இருந்தால் ஏன் உம்மிடம் திருப்பித்தரவேண்டும்? ஆகையால் இந்த விஷயத்தில் எனக்கு ஒன்று தோன்றுகிறது. அதாவது ஆயிரம் ரூபாய் வைத்திருந்த பணப்பை உம்மிடமிருந்து தொலைந்து போனபடியால் தொள்ளாயிரம் ரூபாய் கொண்ட இந்த பை உம்முடையதன்று. இது வேறொருவருடையதுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆயிரம் ரூபாய் கொண்ட பையை உம்மிடம் யாராவது கொண்டுவந்து கொடுத்தால் அதைப் பெற்றுக் கொண்டு அவருக்கு நூறு ரூபாய் கோடுத்துவிடும். இதில் உமக்குச் சம்பந்தமில்லை. வீட்டுக்குச் செல்லலாம்" என்றார்.

அந்தணரைப் பார்த்த நீதிபதி, "இந்தப் பையில் தொள்ளாயிரமே இருக்கிறபடியால் இந்து ரூபாய் கொண்ட பை தொலைந்துவிட்டது என்று யாராவது சொன்னால் அவருக்கு இதைக் கொடும். அதுவரையில் நீரே வைத்துக் கொள்ளும்" என்று சொல்லி, அந்தணரிடம் பையைக் கொடுத்துவிட்டார். வியாபாரிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. தலையில் கையை வைத்து வீட்டுக்குச் சென்றான். பேராசை பெருநஷ்டத்தில் முடிந்தது.

தர்மத்திலிருந்து வழுவாதிருந்த அந்தணருக்குப் பெரிய லாபம் கிடைத்தது. அவருடைய தர்மம் லாபத்தில் முடிந்து இன்பத்தை விளைவித்தது. அவர் பையைப் பெற்றுக் கொண்டு தமது இல்லத்துக்கு வந்து சுகமாக வாழ்ந்தார்.

மேலும் இராமாயணக்கதையைப் பாருங்கள். இந்திரஜித் மாயையினால் ஸீதா உருவைப் படைத்தான். தனது தேரில் அதை எல்லோரும் காணும்படி கத்தியால் வெட்டினான். அந்த மாயா ஸீதை - லக்ஷமணா, ராமா என்று கதறுகிறது. இவன் அந்த ஸீதையின் கூந்தலைப் பிடித்துக் கொண்டு சிரஸை அறுக்கப் போகும்போது ஹநுமான் முதலிய வானரங்கள் தடுத்தன. அப்பொழுதும் அவன் "எந்த ஸீதைக்காக லங்கையில் வந்து போர் செய்கிறீர்களோ, அவளது கதி என்ன ஆயிற்று. உங்களுக்கும் இப்படித்தான் வதம் ஏற்படப் போகிறது" என்று பலாத்காரமாக சிரஸை அறுத்தான். இதை பார்த்த குரங்குகள் ராமனிடம் முறையிட ராமனும் மூர்ச்சையடைந்தான். அது ஸமயம் ராமனுக்கு பல உபதேசம் பித்ருவாக்ய பரிகாலனம் தர்மம் என்ன ஆயிற்று. அநர்த்தத்துக்குத்தானே காரணமாயிற்று. ஸீதையை அபஹரித்த ராவணனுக்கு தீங்கு என்ன ஏற்பட்டது? ஆக தர்மா தர்மங்கள் வீண். மேலும் ராஜ்யத்தை இழந்ததே அதர்மம். அதனால் அந்த ஸெளஹர்யம் இல்லை. பணமிருந்தால்தான் ஸ்நேஹிதன் பந்துக்கள் மற்றவை எல்லாம். தர்மம் செய்வதற்கும் பணம் தேவை என்றெல்லாம் உபதேசம் செய்தான். ஆனாலும் சோகம் எப்படி போகும். விபீஷணன் இந்த செயல் எல்லாம் மாயையால் செய்த செயல். தர்ம மார்க்கத்தில் உள்ள உங்களுக்கு ஒருவித தீங்கும் ஏற்படாது. பதிவ்ரதையான ஸீதை அவனால் எப்படி ஸ்பர்சிக்கமுடியும்? கவலை வேண்டாம். எப்பொழுதும் தர்மம் நம்மை காக்கும் என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.

இராமனும் இந்த்ரஜித்தினுடைய மாயைச் செயல்களை அறிந்து லக்ஷ்மணனுக்கு ஸமாதானம் சொல்ல, மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய்ய ஏற்பாடு செய்தான்.

மேலும் மாயையால் செய்யும் கார்யம் எவ்வளவு நாழிகை இருக்கும்? இந்திரஜால வித்தையை கற்றவன் எல்லோரும் அறியும்படி மாமரத்தையும் பழத்தையும் உண்டு பண்ணுகிறான். அதை புசிக்க முடியுமா? புசித்தால்தான் சிறிது நேரம் ஆனதும் வயிற்றில் மண்ணாகிவிடுகிறது.

ஒருவன் கேட்டான் மாயாவியைப்பார்த்து. இந்த ஜாலவித்தையை ஏன் வெளியில் காட்டுகிறாய். பணத்துக்காகத்தானே ? இதன் மூலம் நிறைய பணம் ஸம்பாதித்து மாடு, வீடு, பங்களா, நகை முதலியவைகளை செய்யலாமே என்று. அவன் சொன்ன பதில்: இம்மாதிரி மாயாவித்தையால் பணம் திரட்டி ரூபாயை கடையில் கொடுத்தால் சற்று நேரத்துக்கெல்லாம் அது மண்ணாகிவிடும். அவ்வப்போது மாயையினால் பணம் திரட்டி பங்களா கட்டினால் நேராக கட்டினாலும் 2-1/2 நாழிகைக்குத்தான் இருக்கும். பிறகு இடிந்து தலைமேல்தான் விழும். ஆக மிக உபத்ரவம் என்று சொன்னான். அது போலத்தான் இந்திரஜித்தின் செய்கை. இதனால் ஸ்ரீராமனுக்கு அவத்யம் ஒன்றுமில்லை. எப்படியும் தர்மம் தலை காக்கும். 

மற்றொரு விஷயம். ரஸமானது. பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வஸிக்கும்போது ஒரு பொய்கையில் தாஹத்தால் தண்ணீர் அருந்த எல்லோரும் மரண மடைந்தனர். யுதிஷ்ட்ரரும் தண்ணீர் அருந்தச் செல்லும்போது யக்ஷதேவதை நான் கேட்ட ப்ரச்னங்களுக்கு பதில் சொல். பிறகு சாப்பிடலாம் என்று சொல்லிற்று. பிறகு அதுவும் கேட்க இவரும் பதில் சொன்னார். இதற்கு யக்ஷப்ரச்னம் எனப் பெயர். ஸந்தோஷமடைந்த யக்ஷன் வரம் கொடுக்கிறேன் கேள் என்று சொல்லிற்று. இவரும், நகுலன் பிழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு யக்ஷன் சொன்னதாவது. போர் நடக்கும் ஸமயம். இப்போது பீமனையோ அர்ஜுனனையோ பிழைக்க விரும்ப வேண்டும். அதை விட்டுவிட்டு நகுலன் பிழைக்க வேண்டும் என்று கேட்கிறாயே. இது ஆச்சர்யம் என்றது. அதற்கு விடை யுதிஷ்ட்ரர் சொன்னதாவது. தர்மம்தான் எனக்கு வேண்டும். என் தகப்பனாரான பாண்டுவிற்கு இரண்டு மனைவிகள். குந்தி என்றும் மாத்ரீ என்றும். அதில் குந்திக்குப் பிள்ளையாய் நான் ஜீவித்திருக்கிறேன். மாத்ரியின் பிள்ளை இருவரும் ஜீவிக்க வில்லை. ஆக அவளுக்கு மூத்த பிள்ளையான நகுலன் பிழைக்கவேண்டும் என்றுப் ப்ரார்த்தித்தேன் என்றார். அதைக் கேட்ட யக்ஷன் உன்னுடைய தர்மபுத்தியைப் பார்த்து ஸந்தோஷமடைந்தேன். நீ தர்மம் நழுவாதவன். ஆகையால் எல்லோரையும் பிழைக்கச் செய்கிறேன் என்று எல்லோருக்கும் ஜீவனம் கொடுத்தான்.

இங்குதான் நாம் கவனிக்க வேண்டும். தர்ம புத்திரருடைய செயலை. தர்மம் தலைகாக்கும் என்பது சரியாகிவிட்டதல்லவா? இங்கு பாரதச்லோகம். இவை 

ச்யாமோ யஏஷ: ரக்த்தாக்ஷ: ப்ருஹச்சால இவோன்னத:
வ்யோமோரஸ்க: மஹா பாஹு: நகுலோ மம ஜீவது

யக்ஷன் ப்ரியஸ்தே பீமஸேனோயம் அர்ஜுநோ வ: பரோமத:
ஸகஸ்மாத் நகுலம் ராஜன் ஸாபத்னம் ஜீவமிச்சஸி

தர்மபுத்ர: தர்ம ஏவஹதோஹந்தி தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
தஸ்மாத்தரம் நத்ய ஜாமி மாநோ தர்மோசவநீத் ஸதா.

குந்தி சைவது மாதர்ச த்வே பார்யேது பிதா: மம
உபே ஸபுத்ரே ஸ்யாதாம்வை இதிமே தீயதே மதி:

யக்ஷன் தஸ்ய தே சந்தாச்ச காமாச்ச ஆந்ருசம்ஸ்யம் பரோ மா:
தஸ்மாத்ரே ப்ராதர: ஸர்வே ஜீவன்து பரதர்ஷப: 


*****

Enter supporting content here