Sri Vu Ve Perukaranai Swami

TWENTY FOUR STEPS

Sri Vu Ve Perukaranai Swami
Sri Vu Ve Perukaranai Swami attains Aacharyan Thiruvadi
Age does not stand in his way :
87th Thirunakshathram
Swami's 86th Thirunakshathram
Swami's 85th Thirunakshathram
Welcome to know about Sri Perukaranai Swami
Swami's profile in brief
Awards
Perukaranai's Swami's Sathabhishekam
Books authored by Perukaranai Swami
Stotra Ratnam
Upanyasa Manjari
Ahobila Kshethram
Pushpanjali
Ekadasi Mahimai
Dharmam Thalai Kaakkum
Mouna Vridham
Ilaya Perumaalum Ilaya Azhvaanum
Hanumanaip Ponra Aacharyan
Thula Kaveri Maahaathmyam
Mummatha Saaram
Nadappadhu Nadandhe Theerum
Patraa Kurai
Pandidhan Yaar ?
Twentyfour Steps
Saadhu Dharisanam
Josyam Balithuvittadhe
Vedham Odhudhal
Pirattiyin Avadhaara Visesham
Anger turns to Anugraham !
Paravaigal
Ten, Three and One
Kadan - Loan
Be Proud, but how ?
Sathurangam
Maarvam Enbadhu Oru Koil
Paasam
Ramanuja Padam
Viswamithrar
Idukkan Kalaiyum Iraivan
Ramanujar Kaattiya Visishtadvaidham
Sri Bashyamum Sri Bashyakaararum
Bagavath Baktharhalin Perumai
Kannika Dhaanam
Kakkum Iyalbinan
What is Truth?
Sampathum Vibathum
Saayujjam
Moonru Manidhargal
Amudhamum Vizhamum
Oru Thaniganin Kelvi
Yathra Praadhaa Sahodharaha
Vuyiraa? Maanamaa?
Moonru Kutrangal
Sammarjanam
Manam En Mariyadhu ?
Sraardham Seyvadhu En ?
Pithru Kaariyathil Oru Visesham
Makkalin Pokku
Dharma Sookshmam
Pava Naasini
Thirumagal Vasikkum Idam
Pirandha Idathaye Adaiyum
Aacharya Kaalamegam
Bagavath Geethaiyum Thiruppavaiyum
Kodari
Ore Iravu Ore Pahal
Padithavan Panakkaaranaa ?
Iru Sahodharargal
Bakthanin Perumai
Vunmaiyai Yosithu Paar
Manidhanin Vayadhu
Naangal Naangale Neengal Neengale
Prapathiyil Oru Visesham
Dhaasyam
Vaishnavan Yaar ?
Deha Sampathu
Favorite Links
Contact Me
.....இதற்கு காரணம் இருபத்துநான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக அந்த மகா காவியம் அவதரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார்.
steps.jpg
STEP AHEAD !
இருபத்துநான்கு படிகள்


அயர்வறும் அமரர்கள் அதிபதியான எம்பெருமானின் திவ்யதேசங்கள் நூற்றெட்டு என்று நம் முன்னோர் கூறுவது வழக்கம். இவையெல்லாம் மயர்வறுமதிநலம் அருளப் பெற்ற திவ்யஸூரிகள் எனப்படும் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் பண்ணப்பெற்றவை. இந்த எல்லாத் திவ்யதேசங்களிலும் எம்பெருமான் அர்ச்சாரூபியாய் ஸகல ஜனங்களுக்கும் ஸர்வ அபேக்ஷிதங்களையும் கொடுத்துக் கொண்டும், 'அர்ச்ய: ஸர்வ-ஸஹிஷ்ணு:' என்ற ரீதியில் நம்முடைய எல்லா அபராதங்களையும் பொறுத்துக்கொண்டும் ஸேவை ஸாதிக்கிறான். இவை அனைத்துக்குமே ஒவ்வோர் அம்சத்தை முன்னிட்டு உத்கர்ஷம் உண்டு.

அதிலும் நம் முன்னோர் நான்கு திவ்யதேசங்களுக்குப் பிராதான்யம் கொடுத்திருக்கின்றனர். கோயில் (ஸ்ரீரங்கம்), திருமலை, பெருமாள்கோயில், திருநாராயணபுரம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களைக் காலை பகல் மாலை மூன்று வேளைகளிலும் ஸந்த்யாவந்தனம் செய்ததும் ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஸந்தானம் செய்யாமலிருப்பதில்லை.

ஸ்ரீரங்கமங்களநிதிம் கருணாநிவாஸம், ஸ்ரீவேங்கடாத்ரிசிகராலயகாளமேகம் |
ஸ்ரீஹஸ்திசைலசிகரோஜ்ஜ்வலபாரிஜாதம், ஸ்ரீசம் நமாமி சிரஸா யதுசைல தீபம் ||

என்று, ஸந்தியாவந்தனம் செய்ததும் இந்த ச்லோகத்தை நம் எல்லாரும் அநுஸந்திப்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், இந்த நான்கு திவ்ய தேசங்களிலும் நடை வடை குடை முடி என்று விசேஷங்கள் உண்டு. கோவிலில் நடை மிகவும் அழகு. திருமலையில் வடையின் ப்ரபாவம் எல்லாருக்கும் தெரியும். பெருமாள் கோவிலில் குடை விசேஷம். திருநாராயண புரத்தில் வைர முடி விசேஷம். 

இப்படி இந்த நான்கு திவ்வ தேசங்களுக்கும் பெருமை உண்டு. அதிலும் பெருமாள் கோவிலுக்கு மற்றும் பல விசேஷ பெருமைகள் உள்ளன. இது காஞ்சி என்று பெயர் பெற்று விளங்குகிறது. க என்று சொல்லப்படும் பிரம்மாவினால் பூஜிக்கபெற்ற பகவான் வசிக்கும் திவ்ய தேசமானபடியால் இதற்கு இந்த பெயர் வந்தது. இதன் மகிமையை ஹம்ஸ ஸந்தேசத்தில் ஸ்ரீஸ்வாமி தேசிகன் பரக்ககக் கூறியிருக்கிறார். 

தாமாஸீதந் ப்ரணம நகரீம் பக்திநம்ரேண மூர்த்நா
ஜாதாமாதெள க்ருதயுகமுகே தாதுரிச்சாவசேந |
யத்வீதீநாம் கரிகிரிபதேர் வாஹவேகாவதூதாந்
தந்யாந் ரேணூந் த்ரிதசபதயோ தாரயந்த்யுத்தமாங்கை: || என்று.

தேவப்பெருமாளின் உத்ஸவம் விமரிசையாக நடக்கிறது. அப்பொழுது எம்பெருமான் கருடன், ஆனை, பரி முதலிய வாகனங்களில் எழுந்தருளுகிறார். வாகன ஆரூடனான எப்பெருமானை ஸ்ரீபாதம்தாங்கிகள் மிகவும் அழகாக எழுந்தருளப் பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வாகனத்திலும் தேவாதிராஜன் எழுந்தருளும்போது அதிக அதிகமான சோபையுடன் கண்டவர் தம் மனம் கவரும்படி ஸேவைஸாதித்து அநுக்ரகிக்கிறான். அந்த திவ்யதேசத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகள் மிகக் கடும் விசையுடன் எழுந்தருளப் பண்ணுவது வழக்கம். அவர்களுடன் ஸேவார்த்திகள் கூட உடன் செல்வது முடியாது. அந்தச் சமயத்தில் ஸ்ரீபாதம் தாங்கிகளின் திருவடிகளிலிருந்து பாததூள் வெளிக்கிளம்பி ஆகாயம் வரையில் பரவுமாம். வாகனாதிரூடனான தேவப்பெருமாளை ஸேவிப்பதற்காக ஸ்வர்க்க லோகத்திலிருந்து ஆகாயத்தில் வந்துள்ள தேவர்கள் அந்தத் தூளைத் தங்கள் சிரத்தினாலே தாங்கிக் கொள்வார்கள். அப்படிப் பட்ட மகிமையைப் பெற்றது இந்தத் திவ்யதேசம்.

மேலும், இந்தத் திவ்யதேசத்தின் மகிமை வாசாமகோசரம் என்று எண்ணி ஸ்ரீஸ்வாமி தேசிகன், "வந்தே ஹஸ்திகிரீசஸ்ய வீதீசோதககிங்கராந்" என்று அருளிச்செய்தார். தேவப் பெருமாளின் வீதியைச் சுத்தம் செய்கிற வேலைக்காரர்களை வணங்குகிறேன் என்றால் இதன் மகிமையை அளக்க முடியாது.

'தேவப் பெருமாளின் வீதியாவது வேதாந்தம். அந்த வேதாந்தத்தின் அர்த்தத்தை அபார்த்தநிரஸநபூர்வகமாக வெளிப்படுத்தினவர்கள் நம் ஆசார்யர்கள். அவர்களை வணங்குகிறேன்" என்பது அதன் உட்கருத்து. இந்தத் திவ்யதேசத்து எம்பெருமானான பேரருளாளனாலே அல்லவா நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் விளங்கிற்று? ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த வள்ளல் ராமாநுஜர் முதலில் யாதவப்பிரகாசனிடம் ஸாமானிய சாஸ்திரங்களையும் சில வேதாந்தபாகங்களையும் கற்று, அவர் மூலமாகத் தமக்கு அவத்யம் வருவதை அறிந்து, கங்கா யாத்திரையிலிருந்து மீண்டு திரும்பி வந்து திகைத்து நின்றபோது, தேவப் பொருமாள் வேடனாகவும் பிராட்டி வேட்டுவச்சியாகவும் வேடம் பூண்டு இவரைக் காத்தார்கள். மேலும், திருக்கச்சி நம்பி மூலமாக இந்த எம்பெருமான் ஆறு வார்த்தைகளை ராமாநுஜருக்குத் தெரிவித்தான். இதன் மூலமாக நம் ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யகாரரானார். வேதாந்த வீதியை முள், கல் முதலிய தோஷங்கள் இல்லாமல் சீர்ப்படுத்திச் சோதித்துக் கொடுத்து, இதரர் சொல்லும் அபார்த்தங்களையும் கண்டித்து, ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார். ஆக, காஞ்சீபுரம் இல்லாவிட்டால் அந்த எம்பெருமான் எங்கே! அந்த எம்பெருமான் இல்லாவிட்டால் ஸ்ரீபாஷ்யகாரரை உணர்த்துபவர் யார்? நம் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தமே விளங்குவது எப்படி? ஆக ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த ஸ்தாபனமே இந்த திவ்யதேசத்தின் பிரபாவத்தினால் ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது. மறைக்கவும் முடியாது. 

மேலும் கருட உத்ஸவம் இந்த ஊரில்தான் விசேஷம். 'அத்தியூரான் புள்ளையூர்வான்' என்று கருட உத்ஸவத்தை முன்னிட்டு ஆழ்வார்கள் இந்த திவ்ய தேசத்தை மிகச் சிறப்பாக கூறியுள்ளார்கள் என்பதும் சர்வ விதிதம். இப்படி பல படியால் காஞ்சி என்ற திவ்ய தேசத்திற்கு மகிமை ஏற்பட்டுள்ளது. அத்த யூரான் புன்னையூர்வான் அணிமணியின் துத்தீசேர் நாகத்தின் மேல் துயில்வான். முத்தீமறையாவான், மா கடல் நஞ்சுண்டான். தனக்கும் இறையாவான் எங்கள் பிரான், என்பது பூதத்தாழ்வார் பாசுரம். இப்படி மங்களாசாஸனாத் ஹிமயமலை முதல் கடல் வரையில் தேசவரை கருடோத்ஸவ விசேஷம் தேவப்பெருமாளுக்கே. இவர் இரவில் நாகத்தின் மேல் சயனித்துக் கொள்கிறார். காலையானதும் எழுந்து விடுகிறார். பணிபதிசயனீயாத உத்தித: த்வம் ப்ரபாதே என்பது தேசிக ஸ்ரீஸூக்தி. இதற்கு மற்றொரு வகையிலும் பிரபாவத்தை சொல்லுகிறேன், கேண்மின்.

இருபத்துநான்கு என்ற எண்ணிக்கை இவ்வூரில் பல விஷயங்களில் உள்ளது. குடை இருபத்துநான்கு சாண் கொண்டது. வாணவெடிகள் இருபத்துநான்கு வகைகள். த்வஜஸ்தம்பத்தில் இருபத்துநான்கு அடுக்கடுக்காக போடப்படும் கவசங்கள் உள்ளன. அனந்த ஸரஸ்ஸில் இருபத்துநான்கு படிகள். கோவின் பிராகாரச் சுவர் இருபத்துநான்கு அடுக்குகள் கொண்டது. கோவிலின் கீழிலிருந்து திருமலைக்குச் சென்று எம்பெருமானை ஸேவிப்பதற்கு படிகள் உள்ளன. இவையும் இருபத்துநான்கே. இப்படி இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷம் இவ்வூரில்தான் உள்ளது. ஸ்ரீமத் ராமாயணம் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. இதற்கு காரணம் இருபத்துநான்கு எழுத்துக்கள் கொண்ட காயத்ரியின் அர்த்தத்தை விவரிப்பதற்காக அந்த மகா காவியம் அவதரித்தபடியால் இருபத்துநான்காயிரம் கிரந்தங்கள் கொண்டதாக வால்மீகி பகவான் அருளிச்செய்தார். அவ்வாறே அந்த மகா காவியத்தின் பிரதான அர்த்தமான பகவானை அறிந்துகொள்வதற்கு இருபத்துநான்கு எண்ணிக்கை கொண்ட விசேஷங்கள் இந்த ஆலயத்தில் ஏற்பட்டிருக்கின்றன. 'காயத்ரியில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம், ஸ்ரீராமாயணத்தில் ப்ரதான ப்ரதிபாத்யமான அர்த்தம் தேவப் பெருமாளே' என்பதை அறிவிக்கவே இந்த ஆலயத்தில் இந்த விசேஷம் என்று எல்லாரும் சொல்லுவர். இப்படிச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும்.

அப்பைய தீக்ஷிதர் என்ற மகான் இந்த விசேஷத்தின் பெருமையை ரஸகனமாக அருளிச்செய்திருக்கிறார். இவர் அத்வைத மதத்தைச் சேர்ந்தவர்; ஆயினும் ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் மிக்க பக்தி பெற்றவர். ஸ்ரீதேசிகனின் பெருமையை நன்கறிந்து, அவர் இயற்றிய யாதவாப்யுதயம் என்ற மகா காவியத்திற்கு வியாக்கியானம் செய்தவர். 'ஸ்ரீமத்வேங்கட நாதஸ்ய காவ்யேஷு லலிதேஷ்வபி | பாவா: ஸந்தி பதேபதே' என்று ஸ்வாமியின் காவியத்தைப் பலவாறு போற்றியவர். திருமலைக்குப் போகும்போது அமைந்துள்ள இருபத்துநான்கு படிகள் விஷயமாக இந்த அப்பைய தீக்ஷிதர் இயற்றிய சுலோகத்தை இங்கே குறிப்போம் -

ஸம்ஸாரவாரிநிதிஸந்தரணைக போத -
ஸோ பாநமார்க சதுருத்தரவிம்சதிர் யா |
தாமேவ தத்வவிதிதம் விபுதோதிலங்க்ய
பச்யந் பவந்த முபயாதி கரீச நூநம் ||

வேதாந்த சாஸ்திரத்தில் இருபத்துநான்கு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றன. ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருத்வி, கர்மேந்திரியம் ஐந்து, ஜ்ஞாநேந்திரியம் ஐந்து, பஞ்ச தந்மாத்ரைகள், மனம் ஆக இவையெல்லாம் அசேதனத்தின் பிரிவுகள், சேதனன் என்பவன் ஜீவன், இவை எல்லாவற்றிற்னும் மேற்பட்டவன் பரமசேதனன் பரமாத்மா. தன்னையும் அசேதனமான இருபத்துநான்கு தத்துவங்களையும் நன்கு அறிந்தவன்தான் சுலபமாகப் பரமாத்மாவை உணரவும் அடையவும் முடியும். அசேதனமான இந்தப் பொருள்களை அறிந்துகொள்வது, 'அவை தோஷத்தோடு கூடியவை' என்று அறிந்து விடுவதற்காக. இப்படி அறிந்தவன்தான் ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைவான். இந்த அசேதனம் இருபத்துநான்கு வகையாக இருக்கிறபடியால் இவை இருபத்துநான்கு படிகளாகின்றன. 'ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவதற்கு, சேதனனான இவன் தான் இருபத்துநான்கு படிகளை ஏறி வைகுண்ட லோகம் போல் உள்ள அத்திகிரியில் இருக்கும் தேவாதிராஜனான பேரருளாளனை ஸேவிப்பது மோக்ஷத்தை அடைவது போல் ஆகிறது' என்பது இந்த ச்லோகத்தின் கருத்து. இப்படி வேதாந்தத்தில் சொல்லக் கூடிய விசேஷ அர்த்தத்தைக் காட்டுவதற்காகவே கீழிருந்து மேலுள்ள பகவானை ஸேவிப்பதற்கு இருபத்துநான்கு படிகள் கட்டப்பட்டு அமைந்திருக்கின்றன போலும். இப்படிப பற்பல விசேஷங்களினால் காஞ்சி என்ற திவ்யதேசத்திற்கு ஸர்வ திவ்யதேங்களைக் காட்டிலும் வாசாமகோசரமான வைபவம் ஏற்பட்டுள்ளது.

நான்முகனே உத்தமமான இந்த திவ்ய தேசத்தில் அச்வமேத யாகம் செய்தான். அதில் இந்திரன் முதலான மந்திரங்களைச் சொல்லி யாகம் நடந்தது. இந்திராதிகளைச் சொல்லியும் ஹவிர்பாகத்தைப் பெற வரவில்லை. ஏன் என்றால் இந்திரனைக் குறித்தா இவர் யாகம் செய்தது. பகவானைக் குறித்து அல்லவா. ஆனால் இந்த ஹவிர்பாக ரஸத்தை அவர்கள் நாக்கால் பருக வில்லை. பின் கண்ணால் பருகினார்கள். எம்பெருமான் பிரஹ்மாவினுடைய தவத்துக்கு வசப்பட்டு நேராக ஸேவை ஸாதித்தான். எல்லோரும் கண்டு ஆநந்தித்தனர் என்றார் ஸ்வாமி தேசிகன்.

இந்த வேள்வியை தடுக்க பிரமன் பத்நியான ஸர்ஸ்வதி வேகவதி நதியாக வந்தாள். அது ஸமயம் பகவான் யதோக்தகாரியாக அவளை வர வொட்டாமல் தடுத்தான். யாகம் நடந்தது பலமும் கிட்டியது. ஒரே பகவான் தன்னை இரண்டுப் பிரிவாகச் செய்து ஸேவை ஸாதித்தான். ஒன்று யதோக்தகாரி. இரண்டாவது தேவப் பெருமான். ஆக இவரே உபாயம். ப்ராப்யம் என்பதை தெரியப் படுத்தினார். ஸ்வாமி தேசிகன் இதை ஏகம் வேககதீமத்யே ஹஸ்திசை லேசத்குச்யதே. உபாயப்பலபாவேன் ஸ்வயம் வ்யக்தம் பரம்மஹ: என்றார்.

அப்பய தீக்ஷிதரின் வரதராஜ ஸ்தோத்திரத்தில் இன்னும் ஒருச்லோகத்தை பார்ப்போம். இவர் யாதவாப்யுதயம் என்னும் காப்பியத்துக்கு உரை எழுதினார் என்பது மாத்திரமில்லை. வ்யாஸஸூத்ரத்துக்கும் ராமாநுஜர் எழுதிய பாஷ்யத்தை அநுஸரித்து நயமயூகமாலிகா என்னும் நூல் எழுதியுள்ளார். அவரது மற்றொருச்லோகத்தின் கருத்தை எழுதிகிறோம். தேவாதிராஜனே நான் உன்னிடம் இரண்டு குற்றம் செய்துள்ளேன். அதை பொருத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். அதற்கு தேவப் பெருமாள் பலகுற்றங்கள் உள்ளனவே ஆக இரண்டே என்று எப்படி என்ன இது விசேஷ குற்றம் என்கிறார். முன் பிறவியில் நான் உன்னை வணங்காதது ஒன்று. அதெப்படி தெரியும் என்றார். இப்பொழுது அழுக்குடல் வந்ததைக் கொண்டே இதை அறியலாம் என்றார். மற்றொன்று இப்பொழுது உன்னை வணங்கியதால் அடுத்த பிறவி இல்லை. ஆக அப்பொழுது வணங்கப்ரஸக்தி இல்லையே. ஆக இந்த இரண்டையும் பொருத்துக் கொள் என்று ரஸகனமான பத்யம் பாடினார். அந்த ஸ்லோகம் இதோ - 

வபூ: ப்ராது ர்வாவாத் அநுமிதம் இதம் ஜன்மநீ புரா முராரே ந க்வாபி க்வசிதபி பவந்தம் ப்ரணதவான் | நமன் முக்த: ஸ்ப்ரதி அதநு: அக்ரேபி அநதிமான் கரீச க்ஷந்தவ்யம் ததிதம் அபராத த்வயமபி ||




*****

Enter supporting content here