Sri Vu Ve Perukaranai Swami

Sraardham Seyvadhu En ?
Sri Vu Ve Perukaranai Swami
Sri Vu Ve Perukaranai Swami attains Aacharyan Thiruvadi
Age does not stand in his way :
87th Thirunakshathram
Swami's 86th Thirunakshathram
Swami's 85th Thirunakshathram
Welcome to know about Sri Perukaranai Swami
Swami's profile in brief
Awards
Perukaranai's Swami's Sathabhishekam
Books authored by Perukaranai Swami
Stotra Ratnam
Upanyasa Manjari
Ahobila Kshethram
Pushpanjali
Ekadasi Mahimai
Dharmam Thalai Kaakkum
Mouna Vridham
Ilaya Perumaalum Ilaya Azhvaanum
Hanumanaip Ponra Aacharyan
Thula Kaveri Maahaathmyam
Mummatha Saaram
Nadappadhu Nadandhe Theerum
Patraa Kurai
Pandidhan Yaar ?
Twentyfour Steps
Saadhu Dharisanam
Josyam Balithuvittadhe
Vedham Odhudhal
Pirattiyin Avadhaara Visesham
Anger turns to Anugraham !
Paravaigal
Ten, Three and One
Kadan - Loan
Be Proud, but how ?
Sathurangam
Maarvam Enbadhu Oru Koil
Paasam
Ramanuja Padam
Viswamithrar
Idukkan Kalaiyum Iraivan
Ramanujar Kaattiya Visishtadvaidham
Sri Bashyamum Sri Bashyakaararum
Bagavath Baktharhalin Perumai
Kannika Dhaanam
Kakkum Iyalbinan
What is Truth?
Sampathum Vibathum
Saayujjam
Moonru Manidhargal
Amudhamum Vizhamum
Oru Thaniganin Kelvi
Yathra Praadhaa Sahodharaha
Vuyiraa? Maanamaa?
Moonru Kutrangal
Sammarjanam
Manam En Mariyadhu ?
Sraardham Seyvadhu En ?
Pithru Kaariyathil Oru Visesham
Makkalin Pokku
Dharma Sookshmam
Pava Naasini
Thirumagal Vasikkum Idam
Pirandha Idathaye Adaiyum
Aacharya Kaalamegam
Bagavath Geethaiyum Thiruppavaiyum
Kodari
Ore Iravu Ore Pahal
Padithavan Panakkaaranaa ?
Iru Sahodharargal
Bakthanin Perumai
Vunmaiyai Yosithu Paar
Manidhanin Vayadhu
Naangal Naangale Neengal Neengale
Prapathiyil Oru Visesham
Dhaasyam
Vaishnavan Yaar ?
Deha Sampathu
Favorite Links
Contact Me

Enter subhead content here

ச்ராத்தம் செய்வது ஏன்?

நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள் மிகவும் வியக்கத்தக்கவை. எந்தக் காரியங்களை அவர்கள் செய்தாலும் அவற்றுக்கு ப்ரமாணம் இல்லாமலிராது. சாஸ்திரங்களில் ஆழ்ந்த கவனத்தை செலுத்தி, அவை விதித்தபடி நடப்பர். எந்த அநுஷ்டானத்தையும் ப்ரமாணமின்றச் செய்ய மாட்டார்கள். நாஸ்திகவாதம் செய்பவர்கள் இக்காலத்தில் பலர் இருக்கின்றனர். அவர்கள் ஆங்காங்கு மகான்களுடைய அநுஷ்டானத்தை தூஷித்து கொண்டு, எதையும் சரி என்று ஒப்புக் கொள்ளாமல், மேடைகளில் எவற்றையாவது பேசி, வீண்பொழுது போக்கி தூற்றுகிறார்கள்.

'எதற்காக இந்த பழக்க வழக்கம் உண்டாயிற்று?' என்பதை நன்கு ஆலோசித்தால் எவரையும் எவரும் தூற்ற மாட்டார். வெகு காலமாக நடத்தி வந்துள்ள ஆசாரங்கள் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டுத்தான் இருக்கும் என்பதை ஆலோசிக்க வேண்டும். இக்காலத்தில் தான் தோன்றிகளாக அவரவர் புத்திக்கு எட்டின அளவு புதுப் புது ஆசாரங்களைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவற்றுக்கு ப்ரமாணத்தை எங்குமே தேடிப் பிடிக்க முடியாது. அவரவர் க்யாதி, லாபம், பூஜை இவற்றில் ஈடுபட்டுப் புதிய ஆசாரங்களைச் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். முன்னோர்களின் அநுஷ்டானம் என்றால் அப்படி இருக்காது. ப்ரமாணங்களையும், லெளகிக ஸந்தர்ப்பங்களையும் ஆராய்ந்து செய்யப்பட்டதாகவே அது இருக்கும்.

நம் முன்னோர்களும் அவர்களை ஓட்டிய நாமும் நம் பித்ருக்களை உத்தேசித்து ச்ராத்தம் என்னும் சடங்கை செய்து வருகிறோம். இதை மிகவும் சிரத்தையுடன் செய்து வருகிறபடியால் 'ச்ராத்தம்' என்று இதை சொல்லுகின்றனர். இதை செய்வதனால் நம் பித்ருக்கள் திருப்தியடைகின்றனர். 

இங்கே சில ஸந்தேஹங்கள் சிலருக்கு உண்டாகக்கூடும். நம் பித்ருக்கள் திருப்தியடைய வேண்டுமானால் அவர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களை உட்கார வைத்து ஸகலவிதமான போஜனங்களையும் இட்டால் திருப்தியடைவரே தவிர, அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்குப்பதிலாக யாரோ சில ப்ராமணர்களை உட்காரவைத்து அன்னமிட்டால் பித்ருக்கள் எப்படித் திருப்தியடைவர்? ஒருவருக்குப் பதிலாக மற்றவர் உண்டால், உண்ணாதவனுக்குப் பசி நீங்கிவிடுமா?

உண்மையில் நம் தாய் தந்தையர் வெளியூருக்கு சென்ற போது அவர்களுக்கு பதிலாக இங்கே சில ப்ராமணர்களுக்கு போஜனமிட்டால் வெளியிலுள்ள பித்ருக்களுக்கு பசி அடங்கிவிடுகிறதா? அவ்வாறு செய்யும் நம் விஷயத்தில் ப்ரீதிதான் உண்டாகுமா?

நன்கு ஆலோசித்தால், நம் முன்னோர்கள் இறந்ந பிறகு எங்கு உள்ளனர் என்பதே தெரியாது. சிலர் இகலோகத்திலேயே வேறு பிறப்பை அடைந்திருக்கலாம். மனிதனாகவோ, மிருகமாகவோ, வேறு பிராணியாகவோ பிறப்பு நேர்ந்திருக்கலாம். சிலர் பாவங்கள் நிறைய செய்திருந்தால் நரகத்துக்கும் சென்றிருக்கலாம். சிலர் புண்ணியங்களை அநுஸரித்து ஸ்வர்கத்தை அடைந்திருக்கலாம். மற்றும் சிலர் எப்பெருமானிடத்தில் ஸதாசார்யர் மூலமாக நன்கு சரணாகதி செய்திருப்பார்கள். அவர்கள் மோக்ஷத்தை பெற்று எல்லையில்லாத ஆனந்தத்தை அநுபவித்து கொண்டிருப்பார்கள். இவர்களை குறித்து நாம் எப்படி ச்ராத்தம் செய்ய முடியும்? செய்வதனால் தான் அவர்களுக்கு என்ன லாபம் உண்டாகிறது? எப்படி அவர்கள் நாம் செய்வதிலிருந்து திருப்தி பெற முடியும்?

மேலும், நாம் பித்ருக்களைக் குறித்து ச்ராத்தம் செய்தால் அவர்கள் ஸந்தோஷப்பட்டு நமக்கு ஆயுஸ்ஸு, சரீர வலிமை, ஸந்ததி, ஆரோக்யம் முதலியவற்றையும், பசு முதலிய ஸம்ருத்தியையும் கொடுக்கிறார்கள்; நாம் செய்யாவிட்டால் சபிக்கிறார்கள் என்று சொல்கிறார்களே. இது பெரும் மூடத்தனமான பேச்சாகவே உள்ளது. நரகத்தில் ஒரு சமயம் பித்ருக்கள் இருந்தால் அவர்களுக்கு இம்மாதிரி பலனை கொடுக்க ஸாமர்த்தியம் ஏது? மோக்ஷத்துக்கு சென்றிருந்தால் அவர்களுக்கு நம்மைப்பற்றிய எண்ணமே இராது. எல்லாரிடத்திலும் அவர்கள் ஸமமான புத்தியையன்றோ செலுத்துகின்றனர்? இவர்கள் நம் புத்ரன், புத்ரி, மனைவி என்ற எண்ணம் அவர்களுக்கு ஏது?

ஸ்வர்க லோகத்தில் தேவரூபர்களாக நம் பித்ருக்கள் இருக்கிறார்கள் என்று சிலர் சொல்லுகின்றனர். 'அப்படியென்றால் தேவதைகளும் பித்ருக்களை ஆராதிக்கிறார்கள் என்று சொல்லுவது எப்படிப் பொருந்தும்? ஆகையால் பித்ருக்கள் என்பவர் யார்? அவர்களைக் குறித்துச் செய்யும் ச்ராத்தம் முதலியன எப்படி அவர்களைத் திருப்தி செய்விக்கின்றன? அவர்கள் இருக்கும் இடம் எது?' என்ற கேள்விகள் ஆஸ்திகர்களுக்கும் உண்டாகக் கூடும்.

இதற்கு லெளகிக யுக்திகளைக் கொண்டும், சாஸ்திரங்களைக் கொண்டும் ஸமாதானம் கூறுகிறோம். முதலில் நாம் அனைவரும், 'மறை உரைக்கும் பொருளெல்லாம் மெய் என்று ஓதுவார்' என்ற ரீதியில் ஆஸ்திகர்களாகையாலும், சாஸ்திரங்களுக்கு உள்ளடங்கி நடக்கிறபடியாலும் சாஸ்திரங்களை கொண்டு விடை கூறுகிறோம்.

ஞானத்திலும் வயதிலும் பராக்ரமத்திலும் மிகப் பெரியவரான பீஷ்மாசாரியர் தம் தந்தையான சந்தனுவைக் குறித்து ச்ராத்தம் செய்தார். அப்போது பிண்டத்தை கொடுக்க முயன்றார். தந்தையான சந்தனு தம் புதல்வரான பீஷ்மர் செய்த ச்ராத்தத்தினால் மகிழ்ந்து தமக்காகக் கொடுத்த பிண்டத்தை தாம் நேரில் கையில் வாங்க வேண்டுமென்று கையை நீட்டினார். பீஷ்மர் மோதிரங்களுடனும் வளையல்களுடனும் கூடிய சிவந்த விரல்களை கொண்ட கையை பார்த்தார். முதலில், 'இதென்ன!' என்று திகிலடைந்தார். பிறகு தம் தந்தையின் இது போன்ற கையை முன்பு அவர் ஜீவித்திருந்த தசையில் பார்த்திருந்ததனால், இப்போது அது நினைவுக்கு வந்து, இது தம் தந்தையின் கையே என்று நிச்சயித்தார். ஆயினும் சாஸ்திரத்துக்கு அடங்கி இவர் நடக்கிறவரானபடியால் பூமியின் மேலுள்ள தர்ப்பங்களின் மேலேயே இவர் அந்த பிண்டத்தை இட்டார். சந்தனு தம் புதல்வரின் ந்யாயமான வழியை கண்டு ஸந்தோஷப்பட்டு, "பீஷ்மநே! என் அருமைப் புதல்வனே! உன் செயலைக் கண்டு மிகக் களிப்புற்றேன். உயர்ந்த புதல்வனைப் பெற்றவனானேன். தர்மங்களை அறிந்தவனாகவும், அறிவிக்கேற்ப ஆசாரத்தையுடையவனுமான உன்னுடைய நீதி தவறாத நடத்தை என் மனத்தை கவர்ந்தது. உலகத்திலுள்ள மக்களுக்கு வழிகாட்டியாக நீ நின்றாய். உனக்கு இஷ்டமான வரத்தை கொடுக்க முன் வந்துள்ளேன்" என்றார்.

பீஷ்மர், "தந்தையே! எனக்கு இவ்வுலகில் ஆக வேண்டியது ஒன்றுமில்லை. தேவரீர் எனக்கு நேரில் வந்து அநுக்ரகம் செய்ய முன் வந்ததே போதுமானது. ஆயினும் எனக்கும் உலகிலுள்ள ஜனங்களுக்கும் தெளிவு உண்டாகும்படி நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும்" என்றார்

இது கேட்ட சந்தனு, "புதல்வா! நீ எவ்வளவு நாள் இந்த பூவுலகில் இருக்க விரும்புகிறாயோ அவ்வளவு நாள் ஜீவித்திருப்பாய். மரணத்தை நீ எப்போது விரும்புகிறாயோ அப்போது வரும்" என்று கூறி, அவருக்கு 'ஸ்வச்சந்த மரண மடைதல்' என்னும் வரத்தை அளித்து, "நீ கேட்கும் கேள்விகளுக்கும் பதில் கூறுகிறேன்" என்றார்.

இது கேட்ட பீஷ்மர், கையைக் கூப்பிட்டுக்கொண்டு முன்பு கூறப்பட்ட ச்ராத்த விஷயமான எல்லா கேள்விகளையும் கேட்டார்.

சந்தனு கூறிய பதில்கள்

நம் தாய்தந்தையர் இறந்த பிறகு இவ்வுலகில் வேறு ஜன்மத்தைப் பெறுவதோ, நரகத்தை அடைவதோ, ஸ்வர்கத்தில் ஸுகத்துடன் இருப்பதோ, மோக்ஷத்தைப் பெறுவதோ உண்மை. ஆயினும் பித்ரு தேவதைகள் என்று சொல்லப்பெறும் சிலர் உண்டு. அவர்கள் பிரம்மாவின் புதல்வர்கள். ஸ்வர்க லோகத்தில் தேவதாரூபியாக அந்தப் பித்ருக்கள் இருக்கின்றனர். அதனால் அவர்களைப் பித்ரு தேவதைகள் என்றே அழைக்கின்றனர். இந்திரன், சூரியன் முதலிய தேவதைகளைக் குறித்து யாகம், இஷ்டி, ஹோமம் முதலியவற்றை செய்வதுபோல் பித்ரு தேவதைகளைக் குறித்து ச்ராத்தம் என்ற சடங்கு செய்யப்படுகிறது. ஸ்வர்க்கம் என்ற லோகாந்தரத்திலுள்ள இந்திரன் முதலிய தேவர்கள் எப்படி நம்மால் கொடுக்கப்படும் ஹவ்யம் முதலியவற்றைப் பெற்றுக்கொள்ளுகிறார்களோ அப்படியே லோகாந்தரத்திலுள்ள பித்ருக்களும் நாம் கொடுக்கும் கவ்யத்தை வாங்கிக்கொள்கின்றனர். யாகம் செய்யும் இடத்தில் இந்திராதி தேவர்கள் தம்மை ஆவாகனம் செய்த பிறகு சரீரத்துடன் வருவது போல், பித்ரு தேவதைகளும் நம் கண்களுக்குப புலப்படாத ஸூக்ஷ்ம சரீரத்தை எடுத்துக் கொண்டு வருகின்றனர். ஒரே ஸமயத்தில் பல இடங்களில் இந்திரனைக் குறித்தே பல யஜமானர்கள் யாகம் செய்தால், பல சரீரங்களை எடுத்துக்கொண்டு ஒரே இந்திரன் ஆங்காங்கு வருவது போல், பல புத்திரர்கள் தங்களது ஒரு தந்தையைக் குறித்துப் பல இடங்களில் ச்ராத்தம் செய்தால் ஆங்காங்கு ஒரே பித்ரு தேவதைகள் பல உருவத்துடன் வந்து கவ்யத்தைப் பெற்று கொள்கிறார்கள்.

மானிட பிறவியில் பிறந்த ஸெளபரி என்னும் ஓர் மகரிஷி பல உருவங்களை எடுத்துப் பல பெண்களுடன் இன்பங்களை அநுபவித்தார் என்று கேட்டிருக்கிறோம். ஒரு மனிதனுக்கே இவ்வளவு சக்தி இருக்க, பிரம்மதேவனால் படைக்கப் பெற்றவர்களும், புத்திரர்கள் செய்யும் சடங்குகளில் கடைக்கும் கவ்யத்தைப் பெற்று கொள்வதற்காகவே ஏற்பட்டவர்களுமான பித்ரு தேவதைகளுக்கு ஏன் இவ்வளவு சக்தி இராது?

'ச்ராத்தங்களில் அந்தணர்களுக்கு அன்னமிட்டால் அவர்களே திருப்தியடைவார்கள். இப்படியிருக்க பித்ரு தேவதைகளுக்கு எப்படி பசியடங்கும்?" என்று ஸந்தேகப்பட வேண்டாம். கர்ப்பிணியான பெண் ஆஹாரம் உட்கொண்டால் கர்ப்பத்திலுள்ள சிசுவுக்கு பசி அடங்கிவிடுகிறதாம். அது நேரில் ஆஹாரத்தை உட்கொள்ளாவிட்டாலும் அதனுடைய பசி அடங்குவது போல், அந்தணர்கள் ஆஹாரம் உட்கொள்ள, பித்ரு தேவதைகளின் பசியடங்கி அவர்கள் திருப்தியடைகிறார்கள். பிறந்த சிசு ஓர் இடத்தை அசுத்தம் செய்தால் அதை உடன் சுத்தி செய்ய வேண்டுமாம். இல்லாவிட்டால் அந்த அசுத்தம் உலருவது போல் சிசுவும் உலர்ந்துவிடுமாம். அசுத்தத்தில் ஒருவன் துப்பினால் உடனே இவனது நெஞ்சு காறுகிறது. ஆஞ்சநேயர் ஸமுத்ரத்தைத் தாண்டியபோது ஸிம்ஹிகை என்ற அரக்கி அவருடைய நிழலைப் பிடித்து இழுக்க, ஹனுமார் மேலே செல்ல முடியாமல் பின்னுக்கே வந்தார் என்று ஸ்ரீமத் ராமாயணத்தில் கேட்டிருக்கிறோம். இழுபட்டது நிழலாக இருக்க, அவர் மேலே செல்ல முடியாமைக்குக் காரணம் யாது?

முன்பு மலைகளுக்கு இறக்கை இருந்தபடியால் அவற்றுக்கு பறக்க வசதி இருந்தது. மனிதனைப் போலுள்ள அரக்கர்கள் எவ்வாறு ஆகாயத்தில் பறந்தார்கள்? மந்திரபலத்தினால் வித்தையைப் பெற்றவர்கள், ஒவ்வொரு தெருவிலும், மனிதர்களால் செய்ய முடியாததும், மிக்க வியப்பைத் தரக் கூடியதுமான எத்தனையோ வேலைகளை செய்வதைப் பார்த்திருக்கிறோம். தேள் கொட்டிவிட்டால் மந்திரத்தை உபயோகித்து, அதனால் உண்டான விஷத்தையும் வலியையும் நீக்குகிறார்கள். பசு தின்ற புல் பாலாக மாறுகிறது. அதே புல்லை மனிதனோ எருதோ தின்றால் பாலாக மாறுவதில்லை. இப்படிப் பல விஷயங்களில் ஒவ்வொர் அதிசயத்தைக் கண்ணால் பார்க்கிற நமக்கு பித்ருதேவதை விஷயத்தில் மாத்திரம் ஐயம் ஏன்?

அவரவர் ஜனக பித்ருக்களின் (தாய் தந்தைகளின்) நாம கோத்திரங்களுடன் மந்திரங்களைச் சொல்லி ஓர் அந்தணனிடம் ஆவாகனம் செய்து இந்த பிராம்மணர்களுக்கு அன்னமிட்டால் நம் பித்ரு தேவதைகள் திருப்தியடையக் குறையில்லை. மந்திரங்களுடைய பலம் அப்படிப்பட்ட மேன்மை வாய்ந்தது. இது கொண்டு, 'வெளியூரில் சென்றிருந்த பித்ருக்களோ, வேறு மனிதர்களோ ஏன் திருப்தி பெறவில்லை?' என்ற கேள்வி கேட்கத் தக்கதன்று. வீடு கட்டுகிறவன், கிணறு வெட்டுகிறவன் முதலிய வேலைக்காரர்கள் ஒவ்வொர் இடத்திலும் புதிதாக வேலைகளை ஆரம்பிக்கும்போது சாணத்தில் அறுகம்புல்லை வைத்துப் பூஜை செய்கின்றனர். பல தினங்களானாலும் அந்த சாணத்தில் கிருமி வருவதில்லை. ஸாதாரணமாக தெருவிலே உள்ள சாணங்களில் மறுதினமே கிருமிகள் அடைத்துக் கொள்கின்றன. இப்படிப் பல விஷயங்கள் உள்ளன.

ஆகையால் பிரம்மாவினால் படைக்கப்பட்ட அவரது புதல்வர்களான பித்ரு தேவதைகளைக் குறித்தே சடங்குகளைச் செய்கிறோம். இதனால் அவர்கள் திருப்தியடைந்து நமது ஜனக பிதாக்கள் ஸ்வர்க்கத்திலோ, நரகத்திலோ, பூமியில் வேறு பிறவியிலோ இருந்தாலும் அவர்களுக்கு பிரம்ம புத்திரர்களான பித்ருதேவதைகள் அந்த அந்த ஸமயங்களில் ஒரு விதமான ஸெளக்கியத்தை கொடுக்கின்றனர். நம்மிடமும் திருப்தியடைந்து ஸர்வ பலனையும் அளிக்கின்றனர். இல்லாவிட்டால் சபிக்கின்றனர். ஒரு புதல்வன் தகப்பன் மூலமாகப் பல முன்னேற்றங்களைப் பெற்றுப் பெரியவனாகி நன்கு ஸம்பாதிக்கும்போது, ஜீவதசையிலுள்ள தகப்பனுக்கு அன்ன மிடாவிட்டால் தந்தைக்கு மனத்தில் எப்படித் தாபம் உண்டாகுமோ அது போலத்தான் பித்ரு தேவதைகளும் ச்ராத்தம் செய்யாவிட்டால் கோபமடைவார்கள்.

ஆகையால் பித்ரு தேவதைகள் திருப்தியடைவதற்கும் அவர்கள் மூலமாக நம் தாய்தந்தையரும் நாமும் ஒரு வித ஸெளக்யத்தை அடைவதற்கும் இந்தச் சடங்குகளை விடாமல் செய்ய வேண்டும் என்பது எம்பெருமானின் கட்டளை. செய்யும்போது அவரவர் நாம கோத்திரங்களைச் சொல்லி பித்ரு தேவதைகளை ஆவாகனம் செய்ய வேண்டும் என்பது கட்டளை. இதில் சொல்ல வேண்டிய பல விஷயங்களை அநேக கல்பம் வாழ்ந்துள்ள மார்கண்டேயர் கூறுவார் என்று சந்தனு தம் புத்ரரான பீஷ்மருக்கு உபதேசித்து மறைந்து விட்டார்.

பீஷ்மாசாரியர் தம் தகப்பனின் உபதேசம் மூலமாகத்தம் ஸம்சயங்களை நீக்கிக் கொண்டு மார்கண்டேயரிடம் இதை அறிந்துகொள்ள அவரை அணுகி, முன்பு நடந்த விஷயங்களை கூறினார். அது கேட்ட மார்கண்டேயர், "கல்வியில் சிறந்தவனே! பிதாவின் மனோரதம் பூர்த்தியடைய வேண்டும் என்று எண்ணி ராஜ்யத்தையும் இழந்த பீஷ்மனே! இவ்விஷயத்தில் எனக்கும் ஸனத்குமாரனுக்கும் நடந்த ஸமாசாரத்தை கூறுகிறேன், கேள்" என்று சொல்லத் தொடங்கினார்.

நான் என் தந்தையின் அநுக்ரகத்தினால் நீண்ட ஆயுளைப் பெற்றவன். அவரிடத்தில் அதிக பக்தியை வைத்தபடியால் எங்கும் பரவிய புகழைப் பெற்றவன். ஒரு சமயம் மேரு மலையை அடைந்து தவம் செய்யத் தொடங்கினேன். அந்த மலையின் வடதிசையில் ஒளியுடன் திகழும் என் அருகில் அணுகும் அழகிய விமானத்தைக் கண்டேன். அதில் ஒரு கட்டிலில் சூரியன் போல் விளங்கிப் படுத்துக் கொண்டிருந்த ஒரு சிறிய உருவத்தைக் கண்டேன். உடனே எழுந்து, அவ்விமானத்தில் இருக்கும் புருஷனுக்கு அர்க்யம் பாத்யம் முதலியவற்றை ஸமர்ப்பித்து, "தேவரீர் யார் என்று அறிய விரும்புகிறேன்" என்றேன். அந்த விமானத்தில் இருந்தவர் புன்சிரிப்புடன் பெரிய உருவத்தை எடுத்துக்கொண்டு, "நான் பிரம்மாவின் புதல்வன்; ஸனத்குமாரன் என்று பெயர். எப்போதும் குமாரனைப் போல், சிறு குழந்தையைப் போல், காமம் க்ரோதம் முதலிய துர்க்குணமற்றவனானபடியால் ஸனத்குமாரன் என்று எனக்குப் பெயர்" என்றார். பிறகு பித்ருக்களின் விஷயங்களையும், அவர்களைப் பற்றிய சடங்குகள் விஷயமாகவும் வினவினேன். அதற்கு அவர் கூறிய விடைகளிலிருந்து தேறியவற்றைக் கூறுகிறேன்.

பித்ரு கணங்கள் ஏழு வகையாக உள்ளன. இவற்றுள் நான்கு கணங்கள் (கூட்டம்) உருவமுடையன; மற்ற மூன்று கணங்கள் உருவமற்றவை. எந்த உலகங்களில் ஸுகாநுபவத்துக்கு உறுப்பான பொருள்கள் எப்போதும் இருக்கின்றனவோ, நித்தியமும் நினைக்கும்போது உண்டாகின்றனவோ, அந்த உலகங்களில் பிரம்மாவின் புதல்வர்களான பித்ரு தேவதைகள் இருக்கின்றனர். வைராஜர், அக்நிஷ்வாத்தர், பாஹிஷத் என்ற பெயர்களுடைய மூன்று கணம் மூர்த்தியற்றவை. இந்த மூன்று கணத்தைத் தேவதைகள் பூஜிப்பர். ஸுகலர்கள் ஆங்கிரஸர்கள், ஸுவதர்கள், ஸோமபர்கள் என்ற நான்கு கணம் மூர்த்தி பெற்றவை. இவர்களைக் க்ரமமாகப் பிராமண க்ஷத்திரிய வைச்ய சூத்திரர்களான நான்கு வர்ணத்தாரும் ச்ராத்தம் செய்து பூஜிக்கின்றனர். ஆகையால் இந்த நான்கில் ஒவ்வொரு கணத்தினரும் கிரமமாக நான்கு வர்ணத்தினருக்கும் பூஜ்யராகின்றனர்.



1. 12 மாஸங்களிலும் ஸங்க்ராந்தி தர்பணம் செய்ய வேணும்.

2. 12 ஆமா வாஸ்யாதினங்களில் செய்ய வேணும்.

3. மஹாளய தர்பணமும் விடாமல் செய்ய வேணும்.

4. அஷ்டகா அந்வஷ்டகா தர்பணம் செய்ய வேணும்.

5. கேதுக்ரஸ்தம் - ஸூர்யக்ரஹணம். ஸூர்யோபராககாலம் தர்பணம் செய்ய வேணும்.

6. ராகுக்ரஸ்தம் சந்திரக்ரஹணம். சந்திரோப ராகுகாலம் தர்பணம் செய்ய வேணும்.



1. இவைகளில் க்ரமமாக ச்ராத்தமே செய்ய வேணும் ச்ராத்தப்ரிதிநிதி தான் தர்பணம்.

2. க்ரமமாக செய்ய வேண்டிய ச்ராத்த ப்ரிதிநிதி சங்கல்ப ச்ராத்தம் செய்கிறார்கள்.

3. ஆமச்ராத்தமும் செய்வர் சிலர். சிலர் கோயில் தளிகை விடுவார்கள்.

4. முக்யமாக வர ருண ஸ்நானம் செய்ய வேண்டும். அதற்கு ப்ரதிநிதியாக கெளண ஸநானம்.

5. மோக்ஷத்திற்காக பக்தியோகம் தான் முக்யம் உபாயம். ஸ்வதந்த்ர ப்ரபத்தி கெளணம், அதிலும் கெளணம் உக்திநிஷ்டை அதிலும் கெளணம் ஆசார்ய நிஷ்டை.

6. முக்யமான கல்பம் செய்ய முடியாமல் போனால் தான் கெளணம் செய்வது.

7. முக்ய கல்பத்தில் அதிகாரி, கெளணத்தை செய்தால் பலனில்லை என்பது சாஸ்த்ரம்.

8. கோதானம் செய்வதற்கு பதிலாக கெளணமாக க்ருச்ரா ரணம் செய்வர்.

9. அநேக காலம் ஸாயம் ப்ரத: ஆஹுதி செய்வதற்காக பதிலாக ப்ராயச்சித்தமாக ஸர்வப்ராயச்சித்தஹோமம் செய்கிறார்கள்.

10. அநேக தர்ச பூர்ணமாஸம், ஸ்தாலீபாகம் செய்யாமல் இருப்பதால் ப்ராயச்சித்தமாக ஸர்வப்ராயச்சித்த ஹோமம் செய்வர்

11. இவையெல்லாம் உண்மையில் செய்ய முடியாமல் போனால்தான் ப்ராயச்சித்தமாக செய்யலாம்.

12. செய்ய முடியாமையை தானாக ஏறிட்டுக் கொண்டு ச்ராத்தத்திற்கு பதிலாக கோயிலிலே தளிகை விடுவது முதலியவை தகாது.

இங்கு விஷ்ணு புராணம்:

1. ப்த்ரு தேவதைகள் கூறுகின்றனர் - எங்களை உத்தேசித்து வஸ்த்ரம் ரத்னம் யானம் மற்ற ஸர்ஸபோகங்களும் ச்ராத்தத்தில் ப்ராஹ்மணர்களின் பொருட்டு எவன் கொடுக்கிறானோ அவன் விஷயத்தில் நாங்கள் (ப்த்ரு தேவதைகள்) ஸந்தோஷமடைந்து தன தான்யம் மற்றய ஸெளபாக்யம் ஸந்ததி இவைகளை கொடுப்போம் என்று.

2. எவன் பக்திச்ரத்தையோடு கூடியவனாய் அன்னத்தால் யதாசக்தி ச்ராத்தம் செய்து அந்தணர்களை பூஜிக்க வைக்கிறானோ அவனிடம் எங்களுக்கு அதிகம் ப்ரீதி.

3. அப்படி சக்தி இல்லாதவன் தான்யம், ஆமம் முதலியவைகளையும் தக்ஷிணைகளையும் கொடுத்து போஜனம் செய்து வைக்க வேணும்.

4. அதிலும் சக்தி இல்லை என்றால் கை நிரம்ப எள்ளையும் தக்ஷிணையும் கொடுத்து விப்ரனை வணங்கி வழி பட வேண்டும்.

5. 7 எண்ணிக்கைக்கு குறையாத எள்ளை எடுத்து கை ரொம்ப ஜலம் சேர்த்து தர்பணம் செய்தல் நல்லது. இவ்வாறு எங்களை உத்தேசித்து செய்தால் ஸந்தோஷமடைவோம்.

6. எதையும் செய்ய சக்தி இல்லாதவன் காட்டுக்குச் சென்று இருக்கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு உடலெல்லாம் தெரியும் வகையில் ஸுர்யாதி திக்பாலகர்கள் அறியும் வகை கூச்சலிட்டு சொல்ல வேண்டும். அதாவது எனக்கு பணம் இல்லை தான்யம் இல்லை மற்றெதுவும் இல்லை. ச்ராத்தம் செய்ய ஸெளகர்யமில்லை. என் பித்ருக்கள் திருப்தியடையவேண்டும் என்று நடுவழியில் புலம்ப வேண்டும். அகதிகள் இதை செய்யலாம். எள்ளு நீர் இல்லாவிடிலும் கண்ணீர் இல்லையா என்பர். இதையும் இல்லாமையை ஏறிட்டுச் சொல்வது கூடாது.

ஸுமதி கேசினி
60 ஆயிரம் பிள்ளை அஸ்மஞ்சஸன்
இல்லை அம்சுமான்
இல்லை திலீபன்
பகீரதன்

பகீரதன் மூலமாக கங்கை வந்தது. பாக்ரதி என பெயர். இந்த பகீரதன் தீலிபன் அம்சுமான் அஸமஞ்சஸன் என்று மூன்று தலை முறை தர்பணம் செய்த படியால் மித்ரு பிதாமஹ ப்ர பிதாமப்ன் என்கிற கணக்கில் நாமும் செய்கிறோம். தர்மசாஸ்த்ரம் கூறியிருப்பதற்கு இது ஒரு ஒளசித்யம் என்பதை உணரவும்.


*****

Enter supporting content here